அகமதாபாத் விமான விபத்தின் எதிரொலியாக ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 அதிகாரிகளை மாற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்களை ஊழியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இந்த அதிகாரிகள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.