இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மத்திய வெளி விவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
ஈரானில் இருந்து நாடு திரும்பியவர்களை வரவேற்று பின் பேட்டியளித்த அவர், நமக்காக ஈரான் அரசு தன்னுடைய வான்வெளியைத் திறந்து, இந்தியர்கள் செல்ல அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவைக் காட்டுவதாக அருண் குமார் சாட்டர்ஜி தெரிவித்தார்.