சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சிவகங்கையில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஆயிரத்து 400 பேர் யோகா லட்சினை வடிவில் யோகா செய்து அசத்தினர்.
சிவகங்கை மாவட்டம் படமாத்தூரை அடுத்துள்ள இலுப்பகுடியில் உள்ள இந்தோ திபெத் எல்கை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி ஜஸ்டின் ராபர்ட் தலைமையில் ஆயிரத்து 400 பேர் ஒரே நேரத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
மேலும் யோகா லட்சினை வடிவில் இந்தோ திபெத் படையினர் அமர்ந்து யோகா பயிற்சியை மேற்கொண்டு அசத்தினர். இதன் கழுகு பார்வை காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.