வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் கடும் போராட்டங்களை முன்னெடுப்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது வரை அதனைச் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
இட ஒதுக்கீடு தொடர்பாகச் சந்திக்க முயன்றால் தன்னை தொந்தரவு செய்யாதீர்கள் என ஸ்டாலின் தெரிவிப்பதாகவும் அன்புமணி கூறினார்.
சட்டமன்றத்தின் உள்ளே ஒன்று வெளியே ஒன்று என மாறி மாறி பேசும் முதலமைச்சரை வேறு எந்த மாநிலத்திலும் பார்த்ததில்லை எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார்.