கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி சிறுமிகளுக்குப் போலி ஆதார் அட்டையை அச்சிட்டு வழங்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பெட்டமுகலாளம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான இரு சிறுமிகள் குழந்தை திருமணத்தின் மூலம் கர்ப்பமடைந்துள்ளனர்.
பிரசவத்துக்கான மகப்பேறு உதவித்தொகையைப் பெற, வயதை அதிகப்படுத்தி போலி ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர், தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி ஆதார் அட்டையைத் தயாரித்துக் கொடுத்த முகமது ஜலால் உல்லா என்பவரைக் கைது செய்தனர். சிறுமிகளின் உறவினர்கள் சிலரைத் தேடி வருகின்றனர்.