திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடியில் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் 2 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.
கடலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அருள் என்பவர், சாலை விரிவாக்க பணிக்குத் தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு பொன்பாடிக்கு சென்றுள்ளார்.
சோதனை சாவடி அருகே சென்றுகொண்டிருந்த லாரி, ஏற்கனவே விபத்தில் சிக்கி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது.
இதனால், லாரியின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர் அருளை நீண்ட நேரம் போராடித் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.