திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கினை மூன்றாவது நீதிபதி அமர்வுக்குக் கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன்பு மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி நிஷா பானு தீர்ப்பு அளித்த நிலையில், இந்த தீர்ப்பில் இருந்து முரண்படுவதாக மற்றொரு நீதிபதி ஸ்ரீமதி கூறினார்.
இதனால், மனுக்களை 3-வது நீதிபதி அமர்வுக்கு மாற்றத் தலைமை நீதிபதிக்கு இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளனர்.