ஒரு ஜனநாயக நாட்டில் பல கட்சிகள் சர்வாதிகார செயல்பாடுகளால் ஜனநாயகத்தை மாற்ற சதி செய்வதே அவசரநிலை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது தொடர்பாக, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற “ஆபத்கால் கே பச்சாஸ் சால்” என்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பிரதமர் மோடி எழுதிய புத்தகம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்தை கொன்ற காங்கிரசுடன் திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.