நாமக்கலில் திமுக பெண் பேரூராட்சி தலைவருக்கு எதிராக திமுக, அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்துள்ளனர்.
பரமத்தி வேலூர் சிறப்புநிலை பேரூராட்சியில் திமுக-வைச் சேர்ந்த லட்சுமி முரளி பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் சர்வாதிகார போக்கினை கடைபிடித்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக, அதிமுக, பாமக கட்சி கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளனர்.