உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் செங்கல் சூளையில் புகுந்து தாக்கிய சிறுத்தையுடன் ஏற்பட்ட சண்டையில் இளைஞர் ஒருவர் உயிர்தப்பி உள்ளார்.
லக்கிம்பூர் கேரியின் தவுர்பூர் வனப்பகுதியில் உள்ள ஜுக்னுபூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்போது அங்கிருந்த இளைஞரை சிறுத்தை தாக்க முயன்ற போது அந்த இளைஞர் சிறுத்தையுடன் மல்லுகட்டியுள்ளார்.
இதனிடையே அங்கு திரண்ட பொதுமக்கள் செங்கற்களை கொண்டு சிறுத்தையை தாக்கி உள்ளனர். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து சென்றது. இந்நிலையில் இளைஞர் சிறுத்தையுடன் மல்லுக்கட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.