திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு அதிகாரிகளைக் கண்டித்து பேருந்துகளைச் சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தும்பேரி ஊராட்சியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பட்டா பெற்று வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
எஞ்சிய இடத்தில் ஆரம்பச் சுகாதார நிலையம், பள்ளிக் கட்டிடம் கட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் வெளியூர் மக்களுக்குப் பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வந்ததால் தும்பேரி கூட்டுச் சாலையில் பேருந்துகளைச் சிறை பிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.