விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!
Jun 25, 2025, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை முதல் சத்தியமங்கலம் இடையிலான தமிழக அரசின் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விளைநிலங்களை அழித்துப் போடப்படும் சாலைத்திட்டத்திற்கான பணிகளை இனியும் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலிருந்து கோவில்பாளையம், அன்னூர் வழியாக ஈரோடு மாவட்டத்தின் புளியம்பட்டி சத்தியமங்கலம் செல்லும் சாலையில் நாள்தோறும் 25 ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்த நிலையில் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கோவையிலிருந்து திம்பம் வழியாகக் கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் மத்திய அரசால் திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை, மலைப்பகுதி, புலிகள் சரணாலய அறிவிப்பு ஆகியவற்றால் கைவிடப்பட்டது. மத்திய அரசால் கைவிடப்பட்ட சாலையை தற்போது மாநில அரசு பசுமை வழிச்சாலை எனும் பெயரில் அமைக்கத் திட்டமிட்டு வருவதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோவையில் செயல்படுத்தப்படும் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விவசாயிகள், இந்த பசுமை வழிச்சாலைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தில் தொடங்கி அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை வழியாகக் கர்நாடக எல்லை வரை சென்றடையும் இந்த பசுமை வழிச்சாலையால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

விளைநிலங்களைக் கையகப்படுத்த முடிவுசெய்த தமிழக அரசு, அதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியிருக்கும் நிலையிலும், விரிவான திட்ட அறிக்கையையோ, இத்திட்டத்திற்கான கருத்தறிக்கையையோ விவசாயிகளுக்கு வழங்க மறுப்பதன் மூலம் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

விளைநிலங்களைக் கையகப்படுத்தி சாலை அமைப்பதற்கான பணிகள் இனியும் தொடருமேயானால் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தையும் முன்னெடுக்கவும் தயங்க மாட்டோம் என அப்பகுதியின் ஒட்டுமொத்த விவசாயிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கோவை முதல் சத்தியமங்கலம்பசுமை வழிச்சாலைDestroying farmland to build a greenway?: Uproar against the governmentஅரசுக்கு எதிராக கொந்தளிப்பு
ShareTweetSendShare
Previous Post

குஜராத் : சாலைகளில் தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Next Post

ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் : விண்வெளியில் விவசாயம்!

Related News

கிருஷ்ணகிரி : அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த உறவினர் மீது புகார்!

காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : இயக்குநர் தலைமையில் குழு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி – நயினார் நாகேந்திரன்!

சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலைக்கழிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

திண்டுக்கல் : கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!

தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீர் – நுரை பொங்கிச் செல்வதால் நோய்த்தொற்று அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

அவசரநிலை இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம் : பிரதமர் மோடி

PFI ஹிட் லிஸ்ட்டை NIA மீட்டுள்ளது!

சேலம் : ரூ.25 லட்சத்தை திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!

மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயம்!

திருவள்ளூர் : பாஜக பிரமுகரை அரிவாளை கொண்டு மிரட்டிய முன்னாள் காவலர்!

கோவில்பட்டியில் புதிதாக நடப்பட்ட மின்கம்பம் சரிந்து விழுந்து ஆட்டோ சேதம் – ஆட்டோ டிரைவருக்கு காயம் பரபரப்பு!

கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தலைமறைவு : தீவிரமாக தேடும் போலீசார்!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் – 9 ராக்கெட் : கண்ணீர் மல்க உற்சாகப்படுத்திய இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் தாய்!

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies