விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!
Jan 14, 2026, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை முதல் சத்தியமங்கலம் இடையிலான தமிழக அரசின் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விளைநிலங்களை அழித்துப் போடப்படும் சாலைத்திட்டத்திற்கான பணிகளை இனியும் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலிருந்து கோவில்பாளையம், அன்னூர் வழியாக ஈரோடு மாவட்டத்தின் புளியம்பட்டி சத்தியமங்கலம் செல்லும் சாலையில் நாள்தோறும் 25 ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்த நிலையில் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கோவையிலிருந்து திம்பம் வழியாகக் கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் மத்திய அரசால் திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை, மலைப்பகுதி, புலிகள் சரணாலய அறிவிப்பு ஆகியவற்றால் கைவிடப்பட்டது. மத்திய அரசால் கைவிடப்பட்ட சாலையை தற்போது மாநில அரசு பசுமை வழிச்சாலை எனும் பெயரில் அமைக்கத் திட்டமிட்டு வருவதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோவையில் செயல்படுத்தப்படும் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விவசாயிகள், இந்த பசுமை வழிச்சாலைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தில் தொடங்கி அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை வழியாகக் கர்நாடக எல்லை வரை சென்றடையும் இந்த பசுமை வழிச்சாலையால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

விளைநிலங்களைக் கையகப்படுத்த முடிவுசெய்த தமிழக அரசு, அதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியிருக்கும் நிலையிலும், விரிவான திட்ட அறிக்கையையோ, இத்திட்டத்திற்கான கருத்தறிக்கையையோ விவசாயிகளுக்கு வழங்க மறுப்பதன் மூலம் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

விளைநிலங்களைக் கையகப்படுத்தி சாலை அமைப்பதற்கான பணிகள் இனியும் தொடருமேயானால் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தையும் முன்னெடுக்கவும் தயங்க மாட்டோம் என அப்பகுதியின் ஒட்டுமொத்த விவசாயிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பசுமை வழிச்சாலைDestroying farmland to build a greenway?: Uproar against the governmentஅரசுக்கு எதிராக கொந்தளிப்புகோவை முதல் சத்தியமங்கலம்
ShareTweetSendShare
Previous Post

சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலைக்கழிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Next Post

ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் : விண்வெளியில் விவசாயம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies