செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாகக் குண்டு பாய்ந்து 6-ம் வகுப்பு பள்ளி மாணவர் படுகாயமடைந்தார்.
கொங்கரந்தாங்கலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தெரு நாயொன்று சுற்றித் திரிந்தது.
இதனை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கொல்ல முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் அழைத்து வந்த நரிக்குறவர் சரத்குமார் என்பவர், தெருநாயை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அப்போது துப்பாக்கிக் குண்டு தவறுதலாகப் பாய்ந்ததில், அதே பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவரான குறளரசன் என்பவர் தலையில் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து சிறுவன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சித்தாமூர் போலீசார், வெங்கடேசன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.