போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பிரசாத் அண்மையில் அடிதடி வழக்கில் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு போதைப் பொருட்களை விற்றது தெரிய வந்தது. இதனால், நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற நிலையில் அவருக்குச் சம்மன் அனுப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கிருஷ்ணாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
கிருஷ்ணா கேரளாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஏற்கனவே ஒரு தனிப்படை போலீசார் முகாமி தேடி வந்தனர். இந்நிலையில் கூடுதலாக 4 தனிப்படைகள் அமைத்து கிருஷ்ணாவை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னையில் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவரிடம் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.