ஆஷாட அமாவாசையையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திருவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
ஆஷாட அமாவாசையில் செய்யப்படும் பரிகாரங்கள், பித்ருதோஷம் மட்டுமின்றி, அனைத்து விதமான கிரக தோஷங்களையும் நீக்கக் கூடியதாகக் கருதப்படுகிறது.
இதையொட்டி திருவேணி சங்கமத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்குத் திதி கொடுத்தனர். மேலும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடியும் வழிபாடு நடத்தினர்.