திருப்பத்தூரில் முதலமைச்சர் வருகைக்காக திமுகவினர் மின்சாரத்தை திருடி தெருவிளக்குகளை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் இன்றி மக்கள் அவதியடைந்து வந்த நிலையில் முதலமைச்சர் வருகைக்காக அவசர அவசரமாக தற்காலிக தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மின்கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து தற்காலி தெருவிளக்குகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக தெரு விளக்குகள் இல்லை என பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் வருகைக்காக மின்சாரத்தை திருடி திமுகவினர் தெரு விளக்குகளை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.