சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், கருணை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த 25 சதவீத பணி நியமனத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் சேலம் வள்ளுவர் சிலை முதல் கோட்டை மைதானம் வரை வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ் தலைமையில் பேரணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.