10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு காட்டுநாயக்கன் சமூகத்தை வஞ்சிப்பது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி-சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் முத்துக்குமார் – திருமணி தம்பதியினரின் மகனான செல்வன். முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது.

பரமன்குறிச்சியில் CSI அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் முத்துக்கிருஷ்ணனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக அவரது குடும்பத்தார் கூறுகிறார்கள்.

மாணவரோ காட்டுநாயக்கன் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சாதிச்சான்றிதழை பெறுவதில் சிக்கல் இருந்துள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல் இருந்தும், எத்தனையோ சட்டப் போராட்டங்களை நடத்தியும் காட்டுநாயக்கன் சமூகத்தினர் சாதிச்சான்றிதழைப் பெறுவது பெரும் போராட்டமாகவே மாறியுள்ளது.

இதனால், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளை இந்த சமூக மாணவர்கள் தாண்டுவதே இயலாத காரியமாக மாறி வருகிறது. அதனாலேயே உயர்கல்வி இந்த சமூக மக்களுக்கு எட்டாக்கனியாக இருப்பது வேதனையான விஷயம்.

சமூகநீதி அரசென்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும்  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த காட்டுநாயக்கன் சமூகத்தை வஞ்சிப்பது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் முத்துக்கிருஷ்ணன் தன் சாவுக்கு காரணம் என்று பள்ளி தலைமையாசிரியர் உட்பட 4 பேரை எழுதி வைத்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.

இதன் விசாரணை எந்த அளவில் உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம், பியூலா, மேரி, தலைமையாசிரியர் சத்யா மற்றும் வளர்மதி ஆகிய நான்கு ஆசிரியர்களை சஸ்பெண்ட் மட்டும் செய்துவிட்டால் போதுமென நினைப்பது அநீதி.

மாணவனின் தற்கொலைக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு துன்புறுத்தியதே காரணமென்றால் மாணவனின் மரணத்திற்கு பாதி பொறுப்பை இந்த அரசும் சுமக்க வேண்டுமென்பதை தார்மீக ரீதியாக யாரும் மறுக்க முடியாது.

அதே சமயம் அப்படிப்பட்ட அழுத்தத்தை கொடுத்தவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டுமென்பதை தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மறைந்த மாணவன் முத்துக்கிருஷ்ணனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு நயினார் நாகேந்திரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK StalinNayanar Nagendran mlaTamil Nadu government responsible for 10th grade student's suicide: Nainar Nagendran's accusation
ShareTweetSendShare
Previous Post

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

Next Post

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies