10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Nov 15, 2025, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு காட்டுநாயக்கன் சமூகத்தை வஞ்சிப்பது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி-சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் முத்துக்குமார் – திருமணி தம்பதியினரின் மகனான செல்வன். முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது.

பரமன்குறிச்சியில் CSI அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் முத்துக்கிருஷ்ணனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக அவரது குடும்பத்தார் கூறுகிறார்கள்.

மாணவரோ காட்டுநாயக்கன் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சாதிச்சான்றிதழை பெறுவதில் சிக்கல் இருந்துள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல் இருந்தும், எத்தனையோ சட்டப் போராட்டங்களை நடத்தியும் காட்டுநாயக்கன் சமூகத்தினர் சாதிச்சான்றிதழைப் பெறுவது பெரும் போராட்டமாகவே மாறியுள்ளது.

இதனால், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளை இந்த சமூக மாணவர்கள் தாண்டுவதே இயலாத காரியமாக மாறி வருகிறது. அதனாலேயே உயர்கல்வி இந்த சமூக மக்களுக்கு எட்டாக்கனியாக இருப்பது வேதனையான விஷயம்.

சமூகநீதி அரசென்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும்  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த காட்டுநாயக்கன் சமூகத்தை வஞ்சிப்பது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் முத்துக்கிருஷ்ணன் தன் சாவுக்கு காரணம் என்று பள்ளி தலைமையாசிரியர் உட்பட 4 பேரை எழுதி வைத்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.

இதன் விசாரணை எந்த அளவில் உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம், பியூலா, மேரி, தலைமையாசிரியர் சத்யா மற்றும் வளர்மதி ஆகிய நான்கு ஆசிரியர்களை சஸ்பெண்ட் மட்டும் செய்துவிட்டால் போதுமென நினைப்பது அநீதி.

மாணவனின் தற்கொலைக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு துன்புறுத்தியதே காரணமென்றால் மாணவனின் மரணத்திற்கு பாதி பொறுப்பை இந்த அரசும் சுமக்க வேண்டுமென்பதை தார்மீக ரீதியாக யாரும் மறுக்க முடியாது.

அதே சமயம் அப்படிப்பட்ட அழுத்தத்தை கொடுத்தவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டுமென்பதை தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மறைந்த மாணவன் முத்துக்கிருஷ்ணனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு நயினார் நாகேந்திரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK StalinNayanar Nagendran mlaTamil Nadu government responsible for 10th grade student's suicide: Nainar Nagendran's accusation
ShareTweetSendShare
Previous Post

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

Next Post

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Related News

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies