கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் லஞ்சம் கேட்பதால் மக்களின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 2 சமுதாய நலக்கூடங்களை பராமரிப்பதற்கான ஆணை வழங்கும் தீர்மானத்தைத் திமுகவை கவுன்சிலர்கள் 8 பேரும் நிராகரித்தனர்.
வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாதவன் லஞ்சம் கேட்பதால்தான் சமுதாய நலக்கூடங்கள் தொடர்பான பணிகள் நிறுத்தப்படுவதாகக் கூறி, கடையம் தெற்கு ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.