அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திப்ருகர் பகுதியில் இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
திப்ருகர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவிறுத்தி உள்ளது.