டெல்லி பவானா பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இப்பகுதியில் உள்ள கட்டடத்தில் திடீரெனத் தீப்பற்றியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 22 வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீரால் தீயை அணைத்தனர்.
விபத்தின்போது கட்டடத்தில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாகத் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.