ரேஷன்கடைகளுக்குச் சப்ளை செய்யும் உணவுப்பொருட்களைக் கடையின் முன்பு எடைபோட்டு, விற்பனைமுனையக் கருவியில் பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய மனுவிற்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், எடை போடாமல் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்போது, எடை குறைந்தால் எந்தத் தவறும் செய்யாமல் ரேஷன் கடை ஊழியர்கள்பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 4 வாரங்களுக்குள் மனுவிற்கு பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.