கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் கட்டட கழிவுகளை அகற்றாததால், பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் 2 பழமையான வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
இந்நிலையில் அந்தக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படாததால் மாணவர்கள் காயமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கட்டட கழிவுகள் கால்வாயை அடைத்திருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.