ஒடிசாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர்க் கோயில் ரத யாத்திரை இன்று காலைக் கோலாகலமாக தொடங்கியது.
இதையொட்டி புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதன் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும், முதல் முறையாகத் தேசிய பாதுகாப்பு படையின் குறிபார்த்துச் சுடும் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.