இந்தியாவுடன் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், சீனாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகவும், ஒவ்வொரு நாட்டுடனும் அமெரிக்காவின் உறவு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளார். அமெரிக்கா சில சிறந்த வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது என்றும், அதனால் அடுத்த மிகப்பெரிய ஒப்பந்தம் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படலாம் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை கனடா வரி விதித்து வருகிறது என்றும், இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அவர்கள் செலுத்த வேண்டிய வரியை அடுத்த 7 நாளுக்குள் கனடாவுக்கு தெரிவிப்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.