நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஏற்கனவே சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்த விதிகள் உள்ளதாக கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் இந்து சமய அறநிலை துறை ஆணையாளர் இணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், திருவிழாவின் போது எந்த வித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில், அமைதியான முறையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.