புத்தகம் ஒன்றில் காஷ்மீர் அல்லாத வரைபடம் வெளியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ஒரு காலத்தில் நமது நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்தது காங்கிரஸ் கட்சி என தெரிவித்துள்ளார்.
தற்போது பாரதத்தின் சிதைந்த வரைபடத்தை புத்தகத்தின் அட்டைப்படத்தில் வெளியிட துணிந்துள்ளதாகவும், இது அறியாமையா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட அவமானமா? என தெரியவில்லை என்றும அவர் கூறியுள்ளார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி, பிரிவினைவாதம் ஊக்குவிப்பு என காங்கிரஸ் நட்டிற்கு எதிரான தவறான பாதையில் உள்ளதாகவும் அண்ணாமலை சாடியுள்ளார்.