திமுகதான், பாமகவிற்கு எதிரி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னைப் பனையூரில் நடைபெற்ற பாமகச் சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுகதான் பாமகவிற்கு எதிரி என்றும், திமுகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்ச் செல்வப்பெருந்தகை, ராமதாஸைச் சந்தித்தது திமுகவின் சூழ்ச்சி என விமர்சித்த அவர், செல்வப் பெருந்தகை மற்றும் விசிக-வினருக்கு இப்போது மட்டும் ராமதாஸ் மீது திடீர்ப் பாசம் வந்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
விசிகத் தலைவர் திருமாவளவன் எப்போதாவது ராமதாஸைப் புகழ்ந்து பேசியது உண்டா? எனக் கேள்வி எழுப்பிய அவர், 3 பேரும் தங்களின் சுய லாபத்திற்காக ராமதாஸைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் வயது முதிர்வின் காரணமாக ராமதாஸ் குழந்தைப் போல மாறிவிட்டதாகவும், அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் அவர்க் கேட்டுக் கொண்டார்.
பாமகவில் முழு அதிகாரம் தமக்கே இருப்பதாகவும், 99 சதவீதக் கட்சியினர் தம் பக்கமே இருப்பதாகவும் அவர், தெரிவித்தார்.
கொள்ளை அடிப்பவனுக்கும், கொலைச் செய்பவனுக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்கி வருவதாகக் கூறிய அன்புமணி, மிகுந்த மன உளைச்சலால் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் வேதனைத் தெரிவித்தார்.