ஒடிசாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் 2-வது நாளாகக் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜெகந்நாதர் கோயிலில் குவிந்தனர்.
அவர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.