சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
பூலாம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன.