இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர்ப் பலியானதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 256 ஆக உள்ளதாகவும், அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 747 பேரும், கேரளாவில் 680 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 666 பேர்க் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.