இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் புதிய தலைவராகப் பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தலைவராகப் பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவர் நியிமிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 1-ஆம் தேதி ரா அமைப்பின் தலைவராகப் பதவியேற்கும் பராக் ஜெயின், 2 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1989-ஆம் ஆண்டு IPS அதிகாரியாகப் பணியில் சேர்ந்த பராக் ஜெயின், ரா உளவு அமைப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.