போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் மட்டும் தான் குற்றவாளிகளா என கேள்வி எழுப்பினார்.
இருவரும் கைது செய்யப்பட்டால் போதைப்பொருள் விற்பனை நிறுத்தப்படுமா என்றும், போதைப்பொருள் பயன்படுத்திய இரண்டு பேரை கைது செய்துள்ளீர்கள். விற்றவர்கள் எங்கே ? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போதைப்பொருள் விற்றவர் அதிமுக பிரமுகர் என்பதால் விசாரணை திசை திருப்பப்படுவதாகவும், பள்ளி, கல்லூரி வாசல்களில் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன என்றும் சீமான் கூறினார்.