ஆ.ராசாவை கண்டித்து ஜுலை 1ல் பாஜக ஆர்பாட்டம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
Jan 14, 2026, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆ.ராசாவை கண்டித்து ஜுலை 1ல் பாஜக ஆர்பாட்டம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 29, 2025, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக சார்பில் ஜூலை முதல் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ரூ. 1,76,000 கோடி ஊழல் வழக்கில் சிக்கி திகார் ஜெயிலில் இருந்த ஆ.ராசா அரசியல் நாகரீகம் அற்ற முறையில்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

தற்போதும் அவருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதையும் மக்கள் அறிவார்கள்.அருவருப்பான முறையில் பொது வெளியில் பேசுவதை ஆ ராசா வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் ஆக செயல்பட்டவர் தரம் தாழ்ந்து மற்ற தலைவர்களை பேசுவது எந்த வகையில் நியாயம்..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும் ஆ ராசா போன்றவர்கள் பேசுவதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியது – கண்டிக்கத்தக்கது என்றும், நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்ற சர்வாதிகார போக்கை திமுக கடைப்பிடிக்கிறதா..? என்றும் அவர் வினவியுள்ளார்.

அரசியலில் என்ன பேசுவது என்ற வரைமுறை அற்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளை திமுக கடைபிடிக்கிறதா ..? எனறும், எல்லோருமே பதிலுக்கு பதில் பேசினால் தமிழக மக்கள் என்ன நினைப்பார்கள் ..? ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் நாகரிகமற்ற முறையில் பேசுவது மக்களிடையே வெறுப்பை தான் ஏற்படுத்தும். என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆ ராசா போன்றவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் ஆ ராசா போன்றவர்களின் சுய ரூபத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாகவும், இது போன்ற அறிவற்ற வகையில் பேசுவதை தட்டி கேட்கும் வகையிலும் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னை பெருங் கோட்டத்தில்.. பிரிக்கப்பட்டுள்ள ஏழு மாவட்டங்களில் 7 இடங்களில், தனித்தனியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அராஜக போக்கை தொடர்ந்து திமுக வெளிப்படுத்தினால் பாஜக தொடர் போராட்டத்தை நடத்தும் என்றும நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Chennaibjpbjp protesta rajaamith shahTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பாஜக போராட்டம்!

Next Post

புதுச்சேரி பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராமலிங்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies