ஆ.ராசாவை கண்டித்து ஜுலை 1ல் பாஜக ஆர்பாட்டம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
Aug 15, 2025, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆ.ராசாவை கண்டித்து ஜுலை 1ல் பாஜக ஆர்பாட்டம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jun 29, 2025, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக சார்பில் ஜூலை முதல் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ரூ. 1,76,000 கோடி ஊழல் வழக்கில் சிக்கி திகார் ஜெயிலில் இருந்த ஆ.ராசா அரசியல் நாகரீகம் அற்ற முறையில்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

தற்போதும் அவருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதையும் மக்கள் அறிவார்கள்.அருவருப்பான முறையில் பொது வெளியில் பேசுவதை ஆ ராசா வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் ஆக செயல்பட்டவர் தரம் தாழ்ந்து மற்ற தலைவர்களை பேசுவது எந்த வகையில் நியாயம்..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும் ஆ ராசா போன்றவர்கள் பேசுவதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியது – கண்டிக்கத்தக்கது என்றும், நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்ற சர்வாதிகார போக்கை திமுக கடைப்பிடிக்கிறதா..? என்றும் அவர் வினவியுள்ளார்.

அரசியலில் என்ன பேசுவது என்ற வரைமுறை அற்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளை திமுக கடைபிடிக்கிறதா ..? எனறும், எல்லோருமே பதிலுக்கு பதில் பேசினால் தமிழக மக்கள் என்ன நினைப்பார்கள் ..? ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் நாகரிகமற்ற முறையில் பேசுவது மக்களிடையே வெறுப்பை தான் ஏற்படுத்தும். என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆ ராசா போன்றவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் ஆ ராசா போன்றவர்களின் சுய ரூபத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாகவும், இது போன்ற அறிவற்ற வகையில் பேசுவதை தட்டி கேட்கும் வகையிலும் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னை பெருங் கோட்டத்தில்.. பிரிக்கப்பட்டுள்ள ஏழு மாவட்டங்களில் 7 இடங்களில், தனித்தனியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அராஜக போக்கை தொடர்ந்து திமுக வெளிப்படுத்தினால் பாஜக தொடர் போராட்டத்தை நடத்தும் என்றும நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: a rajaamith shahTamil Nadu BJP state president Nainar NagendranChennaibjpbjp protest
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பாஜக போராட்டம்!

Next Post

புதுச்சேரி பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராமலிங்கம்!

Related News

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies