திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். அதன்படி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு பாக்குமட்டை தட்டில் பிரசாதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு நான்கு கோடி ரூபாய் செலவில் ஆண்டு முழுவதும் 25 லட்சம் பக்தர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.