உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அவர் அளித்த பேட்டியில்,
உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசா, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆ.ராசா மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளன என்றும் விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்பட உள்ளதாகப் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன என்றும் திமுக கூட்டணி உடையும் கூட்டணி, அதிலிருந்து பல கட்சிகள் வெளியே வரவுள்ளனர் என்று எல்.முருகன் கூறினார்.