சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
ரோங்ஜியாங் மாகாணத்தில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் முக்கிய கடை வீதிகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் அந்த மாகாணத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்யும் பணிகளில் மீட்புப் படையினருடன் இணைந்து பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.