ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத்தில் இயற்கையாகவே உருவாகும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.
இந்தாண்டிற்கான யாத்திரை நாளை மறுநாள் ஜம்முவில் இருந்து தொடங்கும் எனவும், ஜூலை 3ஆம் தேதி பால்டால் மற்றும் பஹல்காம் வழித்தடங்களில் யாத்திரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நடைபெற்ற நிலையில், ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் காஷ்மீர் காவல்துறை சார்பில் நிலச்சரிவு ஒத்திகையும் தற்போது மேற்கொள்ளப்பட்டது.
யாத்ரீகர்கள் செல்லும் முக்கிய பாதையான ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் பணியில் நாய்கள் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.