பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரை போலியாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் 100 கோடி ரூபாய் வரை பணமோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் முகநூலில் இரும்பு ராடுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதை அறிந்துள்ளார்.
விளம்பரத்தில் உள்ள எண்ணைத் தொடர்பு கொண்டு பேசிய அவர், நிறுவனத்தின் பெயரில் இருந்த வங்கிக் கணக்கில் 30 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார்.
2 நாட்கள் கழித்து தொடர்பு கொண்டபோது அந்த எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதால் புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பீகார் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 34 லட்சம் ரூபாய் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.