நியூசிலாந்தைப் புரட்டிப் போட்ட கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக நியூசிலாந்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. டாஸ்மான் மற்றும் மார்ல்பரோவில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் குடியிருப்புகளை விட்டுப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.