திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் அவரை காவல்துறை தாக்கியது ஏன் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். இது குறித்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என 2 வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.
இந்த முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், மரியாகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் அடித்துக்கொலை செய்யப்பட்ட நபர் தீவிரவாதியா? எனவும், அவர் ஏன் தாக்கப்பட்டார் எனவும் கேள்வி எழுப்பினர்
கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள்
உயிரிழந்த நபரிடம் எந்த ஆயுதங்களும் இல்லாத பட்சத்தில் அவரை தாக்கியது ஏன்? எனவும் வினவினர் .
இளைஞர் உயிரிழந்த விவகாரத்தை மனுவாகப் பதிவு செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.