இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு வரும் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகிலிருந்த 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் மன்னார் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 8 பேரையும் வரும் 3 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.