இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து உரையாடினார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்குச் சொந்தமான ஸ்டூடியோ உள்ளது.
அங்கு வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், ஏ.ஆர்.ரகுமானை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
அப்போது சத்யம், சிவம், சுந்தரம் என்ற குறும்படத்தை மத்திய அரசுக்காக இசையமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.