தொடர் கனமழை காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள சலால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. .
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் செனாப் நதியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சலால் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.