கோவை க.க.சாவடி பகுதியில் காரை வழிமறித்து ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த நகை வியாபாரியான ஜெய்சன் ஜேக்கப் என்பவர் கடந்த 13ஆம் தேதி சென்னையில் இருந்து ஒன்றே கால் கிலோ தங்கத்தை வாங்கி கொண்டு தனது கடை ஊழியர் விஷ்ணு என்பவருடன் திருச்சூர் திரும்பினார்.
கோவை அருகே சென்றபோது லாரியில் வந்த மர்மகும்பல், ஜெய்சன் ஜேக்கப் மற்றும் கடை ஊழியரை தாக்கி தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.
இது குறித்த புகாரின்பேரில் க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன், மர்ம கும்பலைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆலப்புழாவை சேர்ந்த அன்சத், விஷ்ணு ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.