ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் 4 ஆம் நாள் விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற இக்கோயிலின் ரத உற்சவம் வரும் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 4-ம் நாள் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் மனமுருகி வழிபாடு நடத்தினர்.