டெல்லியில் செயற்கை மழை மூலம் காற்று மாசைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி பல ஆண்டுகளாகவே காற்று மாசு காரணமாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் காற்று மாசைக் குறைக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அந்த வகையில் காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழையை அம்மாநில அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி ஜூலை 4 முதல் 11 வரை மேக விதைப்பு சோதனையைத் தொடங்க உள்ளது.