கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!
Jul 1, 2025, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

Web Desk by Web Desk
Jul 1, 2025, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை காரணத்தினால் பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முதன்மையாகத் திகழும் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடியே பிரதான விவசாயமாக அமைந்திருக்கிறது. பரம்பிகுளம் ஆழியாறு உள்ளிட்ட பாசனத் திட்டங்களின் வாயிலாக மட்டும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்னை நகரம் எனப் பெயர்பெற்ற பொள்ளாச்சியில் தென்னை விவசாயமும் தென்னை சார்ந்த தொழில்களும் படிப்படியாக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

நீண்ட காலப் பயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் தென்னை, பயிரப்பட்ட ஐந்து ஆண்டுகளிலிருந்தே விவசாயிகளுக்குக் கைகொடுக்கத் தொடங்கிவிடுகிறது. தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல்வேறு மருந்துகளுக்கும் பயன்படுகிறது. மேலும் தென்னையிலிருந்து பெறப்படும் மட்டை, ஓலை, தென்னங்குச்சிகள் ஆகியவை வணிக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

சந்தைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்யை விடப் பாரம்பரிய முறையில் செக்கில் ஆட்டப்படும் தேங்காய் எண்ணெய் வகைகளுக்கும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பும் உண்டு. இத்தகைய அளவில்லா பயன் தரக்கூடிய தென்னை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பாதித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

தேங்காய் விளைச்சலின்மையால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக நடைபெற்று வந்த செக்காட்டும் தொழில் தற்போது முடங்கிக் கிடக்கிறது. செக்காட்டும் தொழிலையே நம்பியிருந்த தொழிலாளர்கள் வேறு வேலையை நாடிச் செல்ல தொடங்கியுள்ளனர்.

விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதோடு, கஷ்டப்பட்டு விளைவிக்கப்படும் தேங்காய்களுக்கு உரிய விலையும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியைக் கைவிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்வதோடு, நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனத் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Coconut farmers in tears: Request for government to purchase coconutsதென்னை விவசாயிகள்விளைச்சல் பாதிப்புதென்னை
ShareTweetSendShare
Previous Post

ஷெஃபாலி ஜரிவாலாவின் மரணத்திற்கு குறைந்த ரத்த அழுத்தமே காரணம் : போலீஸ் தகவல்!

Next Post

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Related News

நள்ளிரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீசார் : பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை – கோவை மாவட்ட காவல்துறை!

உயர்த்தப்பட்ட மின் கட்டணம் – முழு விவரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு – யாகசாலை பூஜைக்காகக் கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு!

வைகை அணை : பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஈரோடு : குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

2 வது டெஸ்ட் – ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : san francisco unicorns, seattle orcas அணிகள் பலப்பரீட்சை!

FIFA CLUB உலக கோப்பை – AL HILAL அணி வெற்றி!

வழங்காத குடிநீருக்கு வரி செலுத்த ஊராட்சி நிர்வாகம் வற்புறுத்துவதாக மக்கள் குற்றச்சாட்டு!

ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் – திறமையை வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

மின் மோட்டார் வயர்கள் திருட்டு – போலீஸ், விவசாயிகள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட முடிவு!

தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாதி : குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த என்ஐஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies