கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!
Aug 28, 2026, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jul 1, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை காரணத்தினால் பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முதன்மையாகத் திகழும் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடியே பிரதான விவசாயமாக அமைந்திருக்கிறது. பரம்பிகுளம் ஆழியாறு உள்ளிட்ட பாசனத் திட்டங்களின் வாயிலாக மட்டும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்னை நகரம் எனப் பெயர்பெற்ற பொள்ளாச்சியில் தென்னை விவசாயமும் தென்னை சார்ந்த தொழில்களும் படிப்படியாக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

நீண்ட காலப் பயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் தென்னை, பயிரப்பட்ட ஐந்து ஆண்டுகளிலிருந்தே விவசாயிகளுக்குக் கைகொடுக்கத் தொடங்கிவிடுகிறது. தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல்வேறு மருந்துகளுக்கும் பயன்படுகிறது. மேலும் தென்னையிலிருந்து பெறப்படும் மட்டை, ஓலை, தென்னங்குச்சிகள் ஆகியவை வணிக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

சந்தைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்யை விடப் பாரம்பரிய முறையில் செக்கில் ஆட்டப்படும் தேங்காய் எண்ணெய் வகைகளுக்கும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பும் உண்டு. இத்தகைய அளவில்லா பயன் தரக்கூடிய தென்னை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பாதித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

தேங்காய் விளைச்சலின்மையால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக நடைபெற்று வந்த செக்காட்டும் தொழில் தற்போது முடங்கிக் கிடக்கிறது. செக்காட்டும் தொழிலையே நம்பியிருந்த தொழிலாளர்கள் வேறு வேலையை நாடிச் செல்ல தொடங்கியுள்ளனர்.

விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதோடு, கஷ்டப்பட்டு விளைவிக்கப்படும் தேங்காய்களுக்கு உரிய விலையும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியைக் கைவிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்வதோடு, நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனத் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Coconut farmers in tears: Request for government to purchase coconutsதென்னை விவசாயிகள்விளைச்சல் பாதிப்புதென்னை
Share
Tweet
SendShare
Previous Post

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

Next Post

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

Related News

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

இன்றைய தங்கம் விலை!

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்வு!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு; சீனா எச்சரிக்கை

ஆவணி பௌர்ணமியையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்; நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies