கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!
Jun 24, 2026, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jul 1, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை காரணத்தினால் பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முதன்மையாகத் திகழும் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடியே பிரதான விவசாயமாக அமைந்திருக்கிறது. பரம்பிகுளம் ஆழியாறு உள்ளிட்ட பாசனத் திட்டங்களின் வாயிலாக மட்டும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்னை நகரம் எனப் பெயர்பெற்ற பொள்ளாச்சியில் தென்னை விவசாயமும் தென்னை சார்ந்த தொழில்களும் படிப்படியாக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

நீண்ட காலப் பயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் தென்னை, பயிரப்பட்ட ஐந்து ஆண்டுகளிலிருந்தே விவசாயிகளுக்குக் கைகொடுக்கத் தொடங்கிவிடுகிறது. தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல்வேறு மருந்துகளுக்கும் பயன்படுகிறது. மேலும் தென்னையிலிருந்து பெறப்படும் மட்டை, ஓலை, தென்னங்குச்சிகள் ஆகியவை வணிக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

சந்தைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்யை விடப் பாரம்பரிய முறையில் செக்கில் ஆட்டப்படும் தேங்காய் எண்ணெய் வகைகளுக்கும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பும் உண்டு. இத்தகைய அளவில்லா பயன் தரக்கூடிய தென்னை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பாதித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

தேங்காய் விளைச்சலின்மையால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக நடைபெற்று வந்த செக்காட்டும் தொழில் தற்போது முடங்கிக் கிடக்கிறது. செக்காட்டும் தொழிலையே நம்பியிருந்த தொழிலாளர்கள் வேறு வேலையை நாடிச் செல்ல தொடங்கியுள்ளனர்.

விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதோடு, கஷ்டப்பட்டு விளைவிக்கப்படும் தேங்காய்களுக்கு உரிய விலையும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியைக் கைவிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்வதோடு, நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனத் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Coconut farmers in tears: Request for government to purchase coconutsதென்னை விவசாயிகள்விளைச்சல் பாதிப்புதென்னை
ShareTweetSendShare
Previous Post

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

Next Post

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

Related News

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன அடிமைகளா? – நயினார் நாகேந்திரன்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம் – அதிமுக கவுன்சிலர்கள் மீது பேப்பர் வீச்சு!

பேசினாலும் பிரச்சினை, பேசாம இருந்தாலும் பிரச்சினை – நடிகர் ரஜினிகாந்த் ஓப்ன் டாக்!

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies