இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி - முன்னோடியான இளைஞர்!
Jan 14, 2026, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Murugesan M by Murugesan M
Jul 1, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ரோபோடிக் எஞ்சினியர். யார் அந்த ரோபோடிக் எஞ்சினியர். அவரின் மனமாற்றத்திற்குக் காரணம் என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுக்காக ஊரணி புரத்தைச் சேர்ந்த ரோபோடிக் எஞ்சினியர் தான் இந்த தேவேந்திரன். விவசாயத்தின் மீதிருந்த அதீதப்பற்றால் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் ஊதியத்தை உதறித் தள்ளிவிட்டு தஞ்சாவூருக்குத் திரும்பிய தேவேந்திரன் தற்போது இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். நம்மாழ்வாரையே தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட தேவேந்திரன் தான் மேற்கொண்டுவரும் இயற்கை விவசாயத்தின் மூலம் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.

விவசாயத்தை விளையாட்டாக மேற்கொள்வோம் என்ற நம்மாழ்வாரின் கூற்றையே அடிப்படை நெறியாகக் கொண்டிருக்கும் தேவேந்திரன், சோழர்கால பாரம்பரிய தற்காலிக கலையான குத்து வரிசை, அடிமுறை உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பயிற்சி பள்ளி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

பாரம்பரிய உணவை உட்கொள்ள வேண்டும், செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது தான் இக்கலையைக் கற்க முக்கிய கோட்பாடாகவும் தேவேந்திரன் வைத்திருக்கிறார். சோழர்கால தற்காப்புக் கலைகளைப் பயில்வதன் மூலமும், சத்தான பாரம்பரியமிக்க உணவை உண்பதன் மூலமும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடிவதாகப் பயிற்சிபெறும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நம்மாழ்வாரின் வார்த்தைகளையே வாழ்வியல் தத்துவமாகப் பின்பற்றி இயற்கை விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்வதோடு, இளைய தலைமுறை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தரும் தேவேந்திரன் அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

Tags: இயற்கை விவசாயம்Love for organic farming: Trying to preserve tradition - a pioneering youthஇளைஞர்
ShareTweetSendShare
Previous Post

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

Next Post

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies